என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அடுத்த 5 ஆண்டுகளில் ரெயில்வேயில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பியூஷ் கோயல் பேச்சு
Byமாலை மலர்30 Oct 2017 1:11 AM IST (Updated: 30 Oct 2017 1:11 AM IST)
ரெயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மும்பை:
ரெயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய போக்குவரத்துக்கு புதிய பாதை அமைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில், ரெயில்வே துறையில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
இதனை வேலைவாய்ப்பாக மாற்றும் போது, முதலீட்டின் மூலம் மட்டுமே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசின் நோக்கமான பாதுகாப்புடன் கூடிய சவுகரியமான பயண வசதிகளை அளிப்பதில், ரெயில்வே தீவிரமாக செயல்பட்டு, முக்கிய பங்கு ஆற்றுகிறது. ரெயில் வழித்தடங்களை மின்மயமாக்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 10 ஆண்டு இலக்கை, 4 ஆண்டாக குறைக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் மூலம் 30 சதவீதம் வரை செலவு குறைவதுடன், ஆண்டுக்கு எரிபொருள் கட்டணம் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும்.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ரெயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய போக்குவரத்துக்கு புதிய பாதை அமைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில், ரெயில்வே துறையில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
இதனை வேலைவாய்ப்பாக மாற்றும் போது, முதலீட்டின் மூலம் மட்டுமே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசின் நோக்கமான பாதுகாப்புடன் கூடிய சவுகரியமான பயண வசதிகளை அளிப்பதில், ரெயில்வே தீவிரமாக செயல்பட்டு, முக்கிய பங்கு ஆற்றுகிறது. ரெயில் வழித்தடங்களை மின்மயமாக்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 10 ஆண்டு இலக்கை, 4 ஆண்டாக குறைக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் மூலம் 30 சதவீதம் வரை செலவு குறைவதுடன், ஆண்டுக்கு எரிபொருள் கட்டணம் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும்.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X