என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துர்கா பூஜை: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
Byமாலை மலர்27 Sep 2017 2:34 PM GMT (Updated: 27 Sep 2017 2:34 PM GMT)
துர்கா பூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 30-ம் தேதியுடன் விழா நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
துர்கா பூஜை கொண்டாடும் மக்களின் வாழ்வில் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஒழுக்கத்தை கடைப்பிடித்து தீமைகளை அழிப்பதால் கிடைக்கும் வெற்றியின் அடையாளமாக துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. நமது குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளை நேசிக்க வேண்டும் என்பதையே இந்த விழா உணர்த்துகிறது.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சமுதாயத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு மனிதரின் வெற்றியின் பின்னால் பெண்களின் உண்மையான பங்களிப்பு நிச்சயம் உள்ளது. எனவே இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 30-ம் தேதியுடன் விழா நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
துர்கா பூஜை கொண்டாடும் மக்களின் வாழ்வில் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஒழுக்கத்தை கடைப்பிடித்து தீமைகளை அழிப்பதால் கிடைக்கும் வெற்றியின் அடையாளமாக துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. நமது குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளை நேசிக்க வேண்டும் என்பதையே இந்த விழா உணர்த்துகிறது.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சமுதாயத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு மனிதரின் வெற்றியின் பின்னால் பெண்களின் உண்மையான பங்களிப்பு நிச்சயம் உள்ளது. எனவே இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X