என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்
- கிராமத் தலைவரான சுர்ஜராம் கோதாராவின் குழந்தைகள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.
ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் தனது 17 பேரக்குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
ராஜஸ்தானில் நோகா மண்டலத்தில் உள்ள லால் மதேஸர் கிராமத்தை சேர்ந்தவர் சுர்ஜராம் கோதாரா. கிராமத் தலைவரான இவரின் குழந்தைகள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவரது குடும்பத்தில் 17 பேரக்குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டிய நிலையில், அவர்களுக்கு தனித்தனியாக திருமணம் செய்து வைத்தால் செலவு அதிகம் ஆகும் என கருதினர்.
எனவே தங்களது பேரக்குழந்தைகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்த சுர்ஜராமின் குடும்பத்தினர் இதற்காக ஒரே அழைப்பிதழை தயார் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்கள் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு முதல் நாளில் 5 பேரன்களுக்கும், மறுநாளில் 12 பேத்திகளுக்கும் திருமணம் நடந்தது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்