search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சென்னையில் இருந்து காரில் கடத்திய 10 கிலோ தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்
    X

    சென்னையில் இருந்து காரில் கடத்திய 10 கிலோ தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

    • இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.
    • கடத்தல்காரர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து விஜயவாடா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4.3 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கடத்தல் காரர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் கடத்தலை மறைக்க தங்க கட்டிகள் மீது இருந்த அடையாளங்களை அழித்து உள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள், குவைத், கத்தார் ரியால், ஓமன் ரியாஸ் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் ரூ.1.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்களை கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×