search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    உண்மை எது: கோவிட் விழிப்புணர்வை சாதிச்சண்டையாக தூண்டிய பொய் வீடியோ
    X

    உண்மை எது: கோவிட் விழிப்புணர்வை சாதிச்சண்டையாக தூண்டிய பொய் வீடியோ

    • வீட்டிற்கு வெளியே சாலையின் நடுவே தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்கிறார்
    • மக்களுக்கு கோவிட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பணியாளர்கள் எடுத்த வீடியோ

    இணையத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ பரவியது.

    அதில் ஒரு பெண்மணி தனது வீட்டு வாசலில், தனது முகத்தை மூடிக்கொண்டு, வேறு சில பெண்மணிகளை வீட்டிற்கு உள்ளே வர விடாமல் வெளியே நிற்குமாறு சைகை காட்டுகிறார். அவர்கள் தூர நிற்கும் போது இந்த பெண்மணி வீட்டு வாசலில் உள்ள சாலைக்கு நடுவில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்கிறார்.

    "இந்த வீடியோவை கண்டால் இட ஒதுக்கீடு தேவை என்பது விளங்கும். இப்படி ஒரு பாகுபாடு பிராமண அல்லது தாக்கூர் அல்லது பனியா சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு எதிராக நடைபெறுமா?" என ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டு ஒரு குறுஞ்செய்தியையும் இணைத்திருந்தார்.

    இந்த வீடியோவை உண்மை என நம்பிய பல பயனர்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, அந்த பெண்மணியை கடுமையாக விமர்சித்து, உயர் வகுப்பை சேர்ந்தவர்களையும் தாக்கி பரவலாக கருத்துக்களை வெளியிட்டனர்.

    ஆனால் ஆய்வில் இந்த வீடியோ உண்மையில் ஜூன் 22, 2020 அன்று கோவிட் காலகட்டத்தில் நிலவிய கோவிட சுகாதார கட்டுப்பாடுகளின் போது ஒரு வீட்டு வாசலில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிய வந்துள்ளது.

    கோவிட் கட்டுப்பாடுகள் குறித்து அக்காலகட்டத்தில் மக்களிடையே நிலவிய அச்சத்தை போக்கும் வகையில் கர்நாடகாவின் பெங்களூரூவில் சுகாதார பணியாளர்கள் எடுத்திருந்த வீடியோ என தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×