என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
X
பைக் திருட்டு வழக்கில் 12 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட பஞ்சாப் முதல்வர்?- வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்2 April 2022 12:26 PM GMT (Updated: 2 April 2022 12:26 PM GMT)
புகைப்படத்தில் பகவாந்த் மான் உள்ளிட்ட மூன்று பேர் தரையில் அமர்ந்துள்ளனர். 12 வருடத்திற்கு முன் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.
அக்கட்சியை சேர்ந்த பகவாந்த் மான் பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞராக இருந்தபோது பைக் திருட்டு வழக்கு ஒன்றில் பகவாந்த் மான் கைது செய்யப்பட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் பகவாந்த் மான் உள்ளிட்ட மூன்று பேர் தரையில் அமர்ந்துள்ளனர். 12 வருடத்திற்கு முன் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என தெரியவந்துள்ளது. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் பரிசோதனை செய்ததில் இந்த புகைப்படத்தை பஞ்சாப் பாடகர் காராம்ஜித் அன்மோல் என்பவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் 15 வருடத்திற்கு முன் பகவாந்த் மானுடன் ஹோலி கொண்டாட்டத்தின்போது எடுத்த நினைவு என்றும் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை தரவிறக்கம் செய்த சிலர், இது கைது செய்யப்பட்டபோது எடுத்ததாக போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X