என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
X
கொரோனா வைரஸை உருவாக்கியது தடுப்பூசி கண்டுபிடித்த இந்த நிறுவனம் தான்- பரவும் செய்தியால் பரபரப்பு
Byமாலை மலர்26 March 2022 12:27 PM GMT (Updated: 26 March 2022 12:27 PM GMT)
கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தான் அதை உருவாக்கியதாக செய்தி வெளியாகியது.
’தி எக்ஸ்போஸ்’ என்ற இணையதளத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியான செய்தி ஒன்றில் கொரோனா வைரஸை உருவாக்கியது மாடர்னா என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் தான் என்ற ஆவணங்களுடன் நிரூபணமாகியுள்ளதாக செய்தி வெளியானது.
அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:-
சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸை உருவாக்கியது பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான மாடர்னா தான் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை விற்று பல நூறு கோடிகளை சம்பாதித்த அதே நிறுவனம் தான் கொரோனா வைரஸையே உருவாக்கியுள்ளது.
கொரோனாவில் காணப்படும் 19-nucleotide அமைப்பு, மாடர்னா 2017-ம் ஆண்டு ஆய்வு செய்து காப்புரிமை பெற்ற ஒரு கண்டுபிடிப்பின் நியூகிலியோடைட் அமைப்புடன் ஒத்துப்போகிறது. அதாவது 2019-ல் கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு 2017-ம் ஆண்டே இந்த வைரஸை மாடர்னா ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வைரஸ் தான் பரவி உலகம் முழுவதும் 70 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது.
உலகம் உக்ரைன் - ரஷிய போரில் கவனம் செலுத்தி வரும் தருணத்தில் மாடர்னாவின் செயல்கள் குறித்து வெளியான ஆதாரங்கள் மறைக்கப்படுகிறது.
இவ்வாறு செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆய்வு குறித்து மாடர்னா தரப்பில் எந்த ஆய்வும் தரப்படவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மாடர்னா குறித்து வெளியான செய்தி உண்மையில்லை என தெரிவித்துள்ளன.
மாடர்னா செய்தி குறித்து பேசிய யேல் மருத்துவ பள்ளியின் பேராசிரியர் கிரைக் வைலன் என்பவர், மாடர்னா தான் கொரோனாவை உருவாக்கியது என்பது சுத்த பொய். ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் இந்த செய்தி பரப்பப்படுகிறது.
கொரோனாவின் ஜீனோமிற்கும் மாடர்னாவில் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புக்கும் சம்மந்தம் இல்லை. எந்த ஒரு விஞ்ஞானியாலும் புதிய வைரஸ் உயிரினத்தை உருவாக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X