என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதனால் தான் இந்திய வீரர்கள் மயக்கமுற்றனர் - வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி
Byமாலை மலர்31 Aug 2021 8:23 AM GMT (Updated: 31 Aug 2021 8:23 AM GMT)
இந்திய ராணுவ வீரர்கள் மயக்கமுற்ற நிலையில் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவைரஸ் பெருந்தொற்று துவங்கியது முதல், உலகம் முழுக்க அதுபற்றிய போலி செய்திகள் பரவலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் மயக்கமுற்றதாக கூறி வீடியோ ஒன்று வைரலானது.
வைரல் வீடியோ அடங்கிய பதிவுகளில், 'தடுப்பூசி செலுத்திக் கொண்ட ராணுவ வீரர்கள் ஓட்ட பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். இவ்வாறு செய்த போது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுபற்றிய இணைய தேடல்களில், மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வெளியிட்டு இருக்கும் எச்சரிக்கை பதிவு காணக்கிடைத்தது. அந்த பதிவில், வைரல் வீடியோவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வீரர்கள் அதீத வெப்பம் காரணமாக மயக்கமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் வீரர்கள் மயக்கமுற்றனர் என கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X