search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

    குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசுகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். நெசவாளர் காலனி, ஆசாரிப்பள்ளம், மேலராமன் புதூர், சைமன்நகர், மூவேந் தர்நகர், பொன்னப்ப நாடார் காலனி, டி.வி.டி. காலனி, பார்வதிபுரம், கட்டையன் விளை, காமராஜர்புரம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நான் கடந்த முறை 7 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறி உள்ளார். பாராளு மன்றத்தின் ஆவணங்களை பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும்.


    துறைமுகம் கொண்டுவர அனுமதிக்கமாட்டேன் என்றார். இப்போது துறை முகத்திற்கு எதிரானவன் அல்ல என்று பிரசாரம் செய்து வருகிறார். யாரை ஏமாற்ற நினைக்கிறார் அவர். மீனவர் சமுதாய மக்களை மட்டும்மல்லாமல் 20 லட்சம் மக்களையும் ஏமாற்றுகிறார்.

    மூடிக்கிடக்கும் ரப்பர் தொழிற்சாலை திறக்கப்படும் என்கிறார். இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை தூத்துக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டதாக பேசுகிறார். இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான விளக்கம் அவருக்கு தெரியுமா? தூத்துக்குடியில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு, நமது மாவட்டத்தில் அமையும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வேறு. திட்டங்களை பற்றி தெரியாமல் காங்கிரஸ் வேட்பாளர் பேசி வருகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி அலை வீசி வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி பயத்தில் பேசி வருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்து உள்ளோம். நாகர்கோவில் நகரில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் நிறைவேற்றி உள்ள வளர்ச்சித்திட்டங்கள் மக்களுக்கு தெரியும். நான் செயல்படுத்தி உள்ள வளர்ச்சித்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின் போது அ.தி. மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், த.மா.கா. மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கால்டுவின் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp #parliamentelection

    Next Story
    ×