என் மலர்
செய்திகள்

தேர்தல் விதியை மீறியதாக புகார் - பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு
பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
தக்கலை:
குமரி மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேப்போல தேர்தல் விதிமீறல்களை அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி தாஜ் நிஷா தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சம்பவத்தன்று தக்கலை அருகே மேட்டுக்கடை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், எந்தவித அனுமதியும் பெறாமல் திறந்தவெளி ஜீப்பில் கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டும், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
குமரி மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேப்போல தேர்தல் விதிமீறல்களை அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி தாஜ் நிஷா தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சம்பவத்தன்று தக்கலை அருகே மேட்டுக்கடை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், எந்தவித அனுமதியும் பெறாமல் திறந்தவெளி ஜீப்பில் கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டும், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
Next Story






