search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வேட்பாளர்கள் தேர்வு: கனிமொழியிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
    X

    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வேட்பாளர்கள் தேர்வு: கனிமொழியிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தூத்துக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். #kanimozhi #mkstalin #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 25 பேர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர்.

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார் என்பது கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரை தவிர வேறு யாரும் விருப்ப மனுதாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி பெயரில் 33 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

    அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்திருந்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார்.

    தூத்துக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியும் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் பங்கேற்றார்.

    கனிமொழியிடம் தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

    இந்த நேர்காணலின்போது முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உடன் இருந்தனர்.

    நேர்காணலில் திருநெல்வேலி தொகுதிக்கு 39 நிர்வாகிகளும் கன்னியாகுமரி தொகுதிக்கு 25 பேர்களும் வந்திருந்தனர்.

    இவர்கள் ஒவ்வொருவரிடமும் மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்தினார். மற்ற தொகுதிகளுக்கும் இன்று மாலை வரை நேர்காணல் நடைபெறுகிறது. #kanimozhi #mkstalin #parliamentelection

    Next Story
    ×