search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாட்டத்தில் ஏற்பட்ட சண்டையில் படுகாயம் அடைந்த வாலிபர்- ஆஸ்பத்திரியில் பலி
    X

    சூதாட்டத்தில் ஏற்பட்ட சண்டையில் படுகாயம் அடைந்த வாலிபர்- ஆஸ்பத்திரியில் பலி

    • சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
    • சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திக்குளம் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது47) ஆவார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி சுப்பிரமணி நகர் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவருடன் ரவி தனது வீட்டின் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்பொழுது ஏற்பட்ட தகராறில் மோகன் ரவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம். இதில், மயங்கி விழுந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரவி பரிதாபமாக பலியானார்.

    இந்தச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×