search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே கார் மோதி வாலிபர் பலி
    X

    உயிரிழந்த சந்தன கருப்பசாமி.

    கயத்தாறு அருகே கார் மோதி வாலிபர் பலி

    • சந்தன கருப்பசாமி தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
    • மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

    கயத்தாறு:

    விருதுநகர் மாவட்டம் ரெட்டி இனாம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் சந்தன கருப்பசாமி (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சந்தன கருப்பசாமி கயத்தாறு அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்திற்கு தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். தளவாய்புரம் நாற்கர சாலையில் வந்தபோது மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சந்தன கருப்பசாமி படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு நெல்லைஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×