என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
- முருகனின் பெற்றோர் ஆந்திராவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
- நேற்று இரவு முருகன் தனது தாயாருடன் போனில் பேசி விட்டு தூங்க சென்றுள்ளார்.
நெல்லை:
மூன்றடைப்பு அருகே உள்ள ஆ.சாத்தான்குளம் ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் முருகன் (வயது 22). இவரது பெற்றோர் ஆந்திராவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அவர்கள் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
முருகன் மட்டும் ஊரில் உள்ள வீட்டில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று இரவு முருகன் தனது தாயாருடன் போனில் பேசி விட்டு தூங்க சென்றுள்ளார்.
இன்று காலை வெகு நேரமாகியும் அவரது வீடு திறக்காமல் இருந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் பார்த்தபோது முருகன் தூக்கில் பிணமாக தொங்கி னார்.
இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






