search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
    X

    நெல்லை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

    • சேர்மதுரைக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
    • வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    மேலப்பாளையம் சிவராஜபுரம் அன்னை நகர் தெருவை சேர்ந்தவர் சேர்ம துரை (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது மனைவி தருவை யில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து சேர்மதுரை நேற்று மாலை மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக தருவைக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியை சமாதானம் செய்ய முயன்ற போது அவர் கணவருடன் வர மறுத்து ள்ளார். இதில் வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சேர்ம துரை இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×