என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமுகை அருகே வாலிபர் தற்கொலை
- சேர்ந்துவாழ வரமறுத்ததால் வேதனை
- மனைவி வீட்டின் முன்பு தூக்கில் தொங்கினார்
கோவை,
சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது38). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நாகராஜ் கடந்த 2 ஆண்டுகளாக மதுகுடித்து வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் இது தொடர்பாக பிரச்சினை எழவே நந்தினி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
நாகராஜ் தனது மனைவியை அழைத்து வருவதற்காக அங்கு சென்றார். மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜ் மனைவி யின் வீட்டு முன்பு உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






