search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கூடல் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    X

    முக்கூடல் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    • அடிதடி வழக்கில் ஈடுபட்ட வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • வெங்கடேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    முக்கூடல்:

    முக்கூடல் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தென் திருப்புவனம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் முக்கூடல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னபூரணிக்கு புகார்கள் வந்தது. அதன்படி வெங்கடேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு, இன்ஸ்பெக்டர் அன்ன பூரணி வேண்டுகோள் விடுத்தார்.

    அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பர சன் பரிந்துரையின்படி, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், வெங்கடேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து வெங்கடேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×