search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    X

    தென்காசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    • லிப்ட் கேட்டு பணம் - நகையை கொள்ளையடித்த வழக்கில் கணேசன் என்ற முனிய கணேசன் கைது செய்யப்பட்டார்.
    • கணேசன் என்ற முனிய கணேசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் காரில் லிப்ட் கேட்டு பணம் - நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கணேசன் என்ற முனிய கணேசன் (வயது23) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன். மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கணேசன் என்ற முனிய கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×