search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது
    X

    கைதான சிவானந்தம்.

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

    • டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிய வழக்கு.
    • சுமார் 25 பவுன் தங்க கட்டியை போலீசார் கைப்பற்றினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரை அடுத்த மேலையூர் ராசாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 32). மேலையூர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகளில் முக்கிய குற்றவாளியான இவர் கைது செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன்பின்னர் மயிலா டுதுறை மாவட்டத்தில் பூம்புகார் அருகே குரங்குபு த்தூரில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிய வழக்கு, தலச்சங்காடு பகுதியில் வீட்டில் புகுந்து 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கு, மயிலாடுதுறை அருகே மணக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு குற்ற சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்ப டையில் அடையாளம் கண்டு போலீசார் தனிப்படை அமைத்து சிவானந்தத்தை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராசாங்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்ல் சிவானந்தம் வந்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவானந்தத்தை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் பல்வேறு இடங்களில் கொள்ளை யடித்த தங்கத்தை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைத்திருந்தது தெரியவந்தது. தற்போது அதில் சுமார் 25 பவுன் தங்க கட்டியை போலீசார் கைப்பற்றினார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×