search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    • போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லி க்குப்பம் வைடிப்பாக்கம் பகுதியில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெ க்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அவரை நிறுத்தி சோதனை செய்தபோது, முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை போலீஸ் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலனியை சேர்ந்தவர் சித்தார்த் (வயது 23) என தெரிய வந்தது. மேலும் அவர் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்தார்த்தை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×