என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் பணம் திருடிய வாலிபர் கைது
- வீமன் ஐஸ் விற்ற பணத்தை படுக்கையறை ஜன்னல் அருகே வைத்துள்ளார்.
- சக்திவேல் பணத்தையும், செல்போனையும் எடுத்துவிட்டு ஓடினார்
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தில் குடும்பத்தோடு வசிப்பவர் வீமன். ஐஸ் வியாபாரி. நேற்று முன்தினம் இவர் ஐஸ் விற்ற பணத்தை படுக்கையறை ஜன்னல் அருகே வைத்துள்ளார். பின்னர் இரவில் தூங்கிவிட்டார்.
அப்போது ஜன்னலுக்கு வெளியே சத்தம் கேட்டு பார்த்தபோது பாரதி நகரை சேர்ந்த விமல்சேகர் மகன் சக்திவேல் என்பவர் ஜன்னல் வழியாக கையை விட்டு ரூ.3 ஆயிரத்து 500-யையும், செல்போனையும் எடுத்து ஓடி சென்றுள்ளார்.
இதன் பின்னர் வீமன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தனது வீட்டில் திருடிய சக்திவேலை பிடித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
இதனிடையே சக்திவேலும் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். இதில் வீமனும் அவரது மகன் ஆத்திமுத்து மற்றும் பிரபு, ஜெயபிரகாஷ் ஆகியோரும் சேர்ந்து தன்னை கட்டி வைத்து தாக்கியதாக கூறியுள்ளார்.
இதன் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்