என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
    X

    களக்காடு அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

    • முருகன் என்ற சுண்டல் முருகன் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
    • முருகன், பாக்கெட்டில் இருந்த ரூ.120 -ஐ எடுத்து முத்துபாலனிடம் கொடுத்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், மெயின்ரோட்டை சேர்ந்தவர் தொழிலாளி முருகன் என்ற சுண்டல் முருகன் (வயது45). இவர் நேற்று சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிங்கிகுளத்தை சேர்ந்த முத்துபாலன் (28) அவரிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டார். அதற்கு முருகன் மறுத்தார்.இதையடுத்து முத்துபாலன், கத்தியை எடுத்து காட்டி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன முருகன், பாக்கெட்டில் இருந்த ரூ.120 -ஐ எடுத்து கொடுத்தார். பின்னர் முத்து பாலன் தப்பி ஓடி விட்டார். இதுபற்றி முருகன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முத்துபாலனை கைது செய்தார்.

    Next Story
    ×