என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
- சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம்அருகே ரிஷிவந்தியம் ஒன்றியம் நூரோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் கமலகண்ணன்(45). விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன் ரகோத்(29) என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று ரகோத் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கமலகண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ரகோத், இவரது தம்பி முருகவேல், வாஞ்சிநாதன் ஆகிய 3 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






