என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
- அய்யப்பனும், செங்கல் சூளை உரிமையாளர் விஜியும் யால் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிவேல் (31) என்பவரிடம் பாக்கி பணம் கேட்டுள்ளனர்.
- நீ எதற்காக பணம் கேட்கிறாய் என்று கூறி அய்யப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(44). செங்கல் சூளை தொழிலாளி. சம்பவத்தன்று அய்யப்பனும், செங்கல் சூளை உரிமையாளர் விஜியும் யால் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிவேல் (31) என்பவரிடம் பாக்கி பணம் கேட்டுள்ளனர். அப்போது மணிவேல் ஆத்திரமடைந்து, நீ எதற்காக பணம் கேட்கிறாய் என்று கூறி அய்யப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்தனர்.
Next Story






