search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் கண்ணாடி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    வள்ளியூரில் கண்ணாடி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    • சாமிநாதன் என்ற செந்தில் அவருடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • செல்வகுமார்,சாமிநாதன் என்ற செந்திலை அவதூறாக பேசி மணிகண்டன் தாக்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் கீழரத வீதியை சேர்ந்த சாமிநாதன் என்ற செந்தில் (வயது40) என்பவர் அவருடைய நண்பருடன் நேற்று வள்ளியூர் சிவன் கோவில் தெருவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(31) என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து வள்ளியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தடுக்க வந்த போது அவரையும், சாமிநாதன் என்ற செந்திலையும் மணி கண்டன் அவதூறாக பேசி கண்ணாடி பாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சாமிநாதன் என்ற செந்தில் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    Next Story
    ×