என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காதல் திருமணம் செய்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது- வாலிபர் கைது
- பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண், சிறுமி என்பது தெரிய வந்தது.
- சிவகுமார் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.
மதுரை:
மதுரை ஆலங்கொட்டாரம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 27). இவர் சோழவந்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இது பெற்றோருக்கு தெரிய வந்தது. எனவே இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து சிவகுமார் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதனை தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் பிரசவத்துக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அப்போது பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண், சிறுமி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வாடிப்பட்டி சமூக நல அலுவலர் வீரலட்சுமி, சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் கணவர் சிவகுமார், அவரது தந்தை பூமிநாதன், தாய் பூஞ்சோலை, சிறுமியின் தாய் பாண்டிமீனா ஆகிய 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சிவகுமார் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்