search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    X

    நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    • பிரதீப் மீது அடிதடி, களவு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • கொலை மிரட்டல் வழக்கில் பாளை மத்திய சிறையில் பிரதீப் அடைக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பிரதீப் (வயது24). இவர் மீது போலீஸ் நிலையங்களில் அடிதடி, களவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கொலை மிரட்டல் வழக்கில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு பரிந்துரைத்தார். தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பிரதீப் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    Next Story
    ×