search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற வாலிபர் கைது
    X

    பாளையில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற வாலிபர் கைது

    • பாளை பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னீர்பள்ளம் செங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது28) என்பதும், அவரிடம் விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×