search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
    X

    நாங்குநேரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

    • ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
    • முத்துபாரதி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள இரைப்புவாரி புதுக்குளத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ். இவரது மனைவி முத்துபாரதி (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் முத்துபாரதி தனது குழந்தை களுடன் புதுக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    மாயம்

    கடந்த 28-ந் தேதி இரவில் முத்துபாரதி பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது முத்துபாரதி மற்றும் அவரது 2 குழந்தை களையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ரகுராஜ் (50) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் முத்து பாரதியை தேடி வருகிறார்.

    Next Story
    ×