search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    பாளை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • சரிவர வேலைக்கு வராததால் சமீபத்தில் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
    • சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    நெல்லை:

    பாளையை அடுத்த சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 23). இவர் அங்குள்ள தானியக் கிடங்கில் வேலை பார்த்து வந்தார்.

    அவர் சரிவர வேலைக்கு வராததால் சமீபத்தில் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அழகப்பன் யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். கடந்த 7-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×