search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    நெல்லை அருகே மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

    • அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • மது போதையில் இருந்த அவர் பெட்ரோல் திருட வந்ததாக கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டையை அடுத்த அபிஷேகபட்டி அருகே உள்ள சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டியிடம் வாலிபர் ஒருவர் செயினை பறிக்க முயன்று உள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சீவலப்பேரியைச் சேர்ந்த பிரேம் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது பல வழக்குகள் உள்ளது. மது போதையில் இருந்த அவர் பெட்ரோல் திருட வந்ததாக கூறியுள்ளார்.

    ஆனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் வேறு காரணங்கள் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×