search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண் சித்ரவதை- கணவர், மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
    X

    நாங்குநேரி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண் சித்ரவதை- கணவர், மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு

    • ஜெபராணியின் பெற்றோர், திருமணத்திற்காக 43 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுத்தனர்.
    • ஜெடியாவிற்கு, மனைவி ஜெபராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்த கோவில்ராஜ் மகன் ஜெடியா (வயது 28). இவரது மனைவி ரீட்டா ஜெபராணி (24). இவர்களுக்கு கடந்த மே 5-ந்தேதி திருமணம் நடந்தது.

    அப்போது ஜெபராணி யின் பெற்றோர் 43 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுத்தனர். திருமணத்திற்கு பின் இருவரும் மருத குளத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் ஜெடியாவிற்கு, மனைவி ஜெபராணி மீது சந்தேகம் ஏற்பட்டதா கவும், அதனால் அவர் ஜெபராணியை கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபோல ஜெடியாவின் தாயார் இந்திராணி, சகோதரி சிபியா ஆகியோரும் உனது அப்பாவிடம் சென்று பணம் வாங்கி வா என்று கொடுமைப்படுத்திய தாகவும் கூறப்படுகிறது.

    அதனைதொடர்ந்து வீட்டை விட்டு சென்று விடு இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி ஜெபராணி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா இதுதொடர்பாக ஜெப ராணியின் கணவர் ஜெடியா, மாமியார் இந்திராணி, சிபியா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×