என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே இளம்பெண் மின்சாரம் பாய்ந்து சாவு
- செல்வி தண்ணீர் பிடிக்க வீட்டில் இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார்.
- மின்சாரம் பாய்ந்ததில் செல்வி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
களக்காடு கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது22). இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன் திருமணமாகி 1 1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை செல்வி தண்ணீர் பிடிப்பதற்காக அவர்களது வீட்டில் இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். பின்னர் அதனை நகர்த்தி வைப்பதற்காக ஆப் செய்யாமல் கையில் தூக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் செல்வி தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்விக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் சப் -கலெக்டர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்