search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா

    • தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் உலக தண்ணீர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முன்னாள் முதல்வர் கே.பழனி முன்னிலை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். எஸ்.மகேஸ்வரன், கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தொடர்ந்து 2-ம் அமர்வில் அன்புசெல்வன் வரவேற்று பேசினார். நமது நம்பியாறு அமைப்பு தலைவர் விஜயராஜன் வாழ்த்தி பேசினார். டாக்டர் விதுபாலன் சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நமது நம்பியாறு அமைப்பின் செயலர் எம்.ஜான் வின்சன்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ் துறை மற்றும் நமது நம்பியாறு அமைப்பு இணைந்து செய்து இருந்தது.

    Next Story
    ×