search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே தொழிலாளியின் மொபட் திருட்டு
    X

    நாங்குநேரி அருகே தொழிலாளியின் மொபட் திருட்டு

    • சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார்.
    • மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்குத் தெருவை சேர்ந்தவர் மாசானம் (வயது55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×