search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவ உப்பளத் தொழிலாளி இசக்கி அர்ஜூன் (வயது20).
    • நேற்று வழக்கம் போல உப்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது இசக்கி அர்ஜூனை மின்சாரம் தாக்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி 3 சென்ட் அமுதா நகரை சேர்ந்தவர் இசக்கி அர்ஜூன் (வயது20). இவர் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியான பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல உப்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தானமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×