என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் தொழிலாளி சாவு
- மோட்டார் சைக்கிளில் இருந்து ரவிச்சந்திரன் தவறி கீழே விழுந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்க ண்ணபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 40) கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 7-ம் தேதி திருக்கண்ணபுரத்தில் இருந்து தென்னமரக்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து ரவிச்சந்திரன் தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கண்ணபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






