என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
- இசக்கிமுத்து சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- லாரி மீது இசக்கிமுத்து மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள வடமலைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கனகு. இவரது மகன் இசக்கிமுத்து(வயது 30). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 18-ந்தேதி இரவு வேலையை முடித்துவிட்டு ஆலங்குளத்தில் இருந்து அம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். காளத்திமடம் விலக்கு அருகே சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் இசக்கிமுத்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்கு ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்