என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளேஸ்வரன்பட்டியில் தொழிலாளி தற்கொலை
    X

    சூளேஸ்வரன்பட்டியில் தொழிலாளி தற்கொலை

    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • பொள்ளாச்சி கிழக்கு போலீசார் ரமேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

    ெபாள்ளாச்சி,

    தென்காசியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது30). இவரும் சென்னையை சேர்ந்த குமாரி (26) என்பவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு ரமேஷ்குமார் தனது மனைவியுடன் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் தங்கி இருந்தார். ரமேஷ்குமார் கட்டிட வேலைக்கும், குமாரி அங்குள்ள ஒரு வீட்டில் வீட்டு ேவலையும் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இரவு ரேவதி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் ரமேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடலை பார்த்து குமாரி கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து சென்று இறந்த ரமேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×