search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை
    X

    களக்காட்டில் மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை

    • மேகலா நாங்குநேரி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார்.
    • செல்வராஜ் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் லெட்சுமணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

    களக்காடு:

    களக்காடு, ஆற்றாங்கரைதெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மேகலா நாங்குநேரி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார். லெட்சுமணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    கடந்த 11-ந் தேதி லெட்சுமணன் போதையில் வீட்டிற்கு வந்து மனைவி மேகலாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மேகலா தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். லெட்சுமணனும் வீட்டை விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லெட்சுமணன் களக்காடு தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள அவரது உறவினர் செல்வராஜ் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லெட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லெட்சுமணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    Next Story
    ×