search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தொழிலாளி தற்கொலை
    X

    கோவையில் தொழிலாளி தற்கொலை

    • மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
    • பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள மத்திப்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற கந்தசாமி மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். இதனை பார்த்த அவரது மனைவி பூஜை நாள் அதுவுமாக ஏன் குடித்து விட்டு வருகிறீர்கள் என கண்டித்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கந்தசாமி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

    பின்னர் வீட்டிற்கு சென்று வாந்தி எடுத்தார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக அவர் தனது கணவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கந்தசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×