என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- ராஜாராமன் (வயது 45). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- ராஜா ராமன், அங்கிருந்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர்:
கடலூர் அடுத்த வழிசோதனைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 45). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ராஜாராமன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்ற ராஜா ராமன், அங்கிருந்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






