என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த பெண் சாவு
- சாலையை கடக்க முயற்சி செய்த போது முத்துலெட்சுமி மீதுஅரசு பஸ் மோதியது.
- படுகாயமடைந்த முத்துலெட்சுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
களக்காடு:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி, மணலி விளையை சேர்ந்தவர் ரவி மனைவி முத்துலெட்சுமி (வயது39). இவர் கடந்த 4-ந் தேதி நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரில் சாலையை கடக்க முயற்சி செய்த போது, அந்த வழியாக நெல்லை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த முத்து லெட்சுமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






