search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண்  தூக்கு போட்டு தற்கொலை
    X

    திட்டக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • திட்டக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

    கடலூர்:

    திட்டக்குடி அருகே பட்டூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மனைவி சத்தியா (வயது 25). திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் முகாசபரூரில் உள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலாளராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது மாமியார் மணிமேகலை என்பவர் சத்தியாவிடம் சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சத்தியா நேற்று மாலை 6 மணி அளவில் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

    Next Story
    ×