என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூரில் கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை
- கணவரின் மருத்துவ செலவுக்காக, விஜயா அங்கு உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களில் ரூ.1.20 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
- சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
கோவை,
அன்னூர், இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி விஜயா( வயது 44). கூலி தொழிலாளி.இவர்களுக்கு வைஷ்ணவி, கவுசல்யா என 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கசாமி விபத்தில் சிக்கினார். இதனால் கணவரின் மருத்துவ செலவுக்காக, விஜயா அங்கு உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களில் ரூ.1.20 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
அந்த கடனுக்கான தொகையை மாதந்தோறும் திருப்பி செலுத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கஷ்டம் ஏற்படவே வாங்கிய கடனுக்கான தவணைத்தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனல் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். இதனால் மன வேதனை அடைந்த விஜயா தனது கணவருடன் வெளியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதுகுறித்து அறிந்த மகளிர் சுய உதவிக்கு ழுவினர் அவரை தொடர்பு கொண்டு அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கணவருடன் வீட்டிற்கு வந்த விஜயா வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதனால் பயந்துபோன ரங்கசாமி, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என மனைவியை அழைத்தார். அதற்கு விஜயா, ஆஸ்பத்திரி எல்லாம் வேண்டாம். தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு படுத்து தூங்கினார். நீண்ட நேரத்துக்கு பிறகும் விஜயா எழவில்லை. எனவே உறவினர்கள் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது விஜயா இறந்து கிடந்தார்.
உடனடியாக சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.






