search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்-களக்காடு விவசாயிகள் தவிப்பு
    X

    காட்டுப்பன்றிகள் நாசம் செய்த நெற்பயிர்கள்.

    அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்-களக்காடு விவசாயிகள் தவிப்பு

    • விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • காட்டுபன்றிகள் தொடர்ந்து இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகன் (41). விவசாயி.

    இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் பச்சையாறு அணைக்கு செல்லும் வழியில் பாழம்பத்து பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவில் இவரது விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 1 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை நாசம் செய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டுபன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதனைதொடர்ந்து விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×