என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் 3-வது நாளாக பரவலாக மழை- அணை பகுதிகளில் ஏமாற்றம்
- நெல்லை மாவட்டத்தில் பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்கிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக மாவட்டத்தில் ஊத்து பகுதியில் 45 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 40 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 17 மில்லி மீட்டரும் பதிவானது.
இதேபோல் நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாபநாசம், களக்காடு, கொடுமுடியாறு, நெல்லை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை.
இன்று காலை வரை 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் 48.90 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 62.47 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 41.40 அடியாகவும் உள்ளது.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லாததால் குற்றால அருவிகளில் மிக குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் அதிகபட்சமாக 39 மில்லி மீட்டரும், எட்டயபுரத்தில் 18 மில்லி மீட்டரும், கயத்தாறில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்