search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

    • அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது.
    • அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வந்தது. இந்த கோடை வெயிலால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு மதிய வேளைகளில் குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. கன்னடியன்கால்வாய் பகுதியில் 7.20 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே இந்த மழை பெய்தாலும் மாலை வேளையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×