search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த முதியவர் யார்?
    X

    ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த முதியவர் யார்?

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
    • இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர் வெள்ளை, காபி கலரில் கோடு ேபாட்ட ரெடிமேட அரைகை சட்டை, பச்சை, கருப்பு நிற பாக்கெட் வைத்த டிரவுசர் அணிந்திருந்தார். இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து மோகனூர் ரெயில் நிலையத்தின் அதிகாரி சேலம் ரெயில்வே போலீ சாருக்கு த கவல் தெரிவி த்தார். அதன்பேரில் போலீசார், அங்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவர் உடல் ஆஸ்பத்திரி பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி ஏேதனும் தகவல் கிடைத்தால் பொது மக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி ரெயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×