என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
- தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
- 27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
நாளை மறுநாள் (26-ந் தேதி) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து மாநகர தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும், கோவில்பட்டி நகரம் சார்பில் வேலாயுதபுரத்திலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 27-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் எட்டையபுரம் மனநல காப்பகம், நாகலா–புரம் முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
28-ந் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம், பாண்டவர்மங்கலம், நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளாத்திகுளத்தில் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
29-ந் தேதி கயத்தாறு, செட்டிக்குறிச்சி, கழுகுமலை ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
30-ந் தேதி புதூர், குறுக்குசாலை ஆகிய பகுதிகளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 28,29 மற்றும் 3-ந் தேதிகளில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்